ad

RMSIR 2025: ATM யூரானஸ் மூன்று முதலிடங்களை இலக்காகக் கொண்டுள்ளது

15 நவம்பர் 2025, 7:28 AM
RMSIR 2025: ATM யூரானஸ் மூன்று முதலிடங்களை இலக்காகக் கொண்டுள்ளது

கிள்ளான், 15 நவம்பர்: மலேசியா இராணுவம் (ATM) யூரானஸ், 2025 ஆம் ஆண்டு ராஜா மூடா சிலாங்கூர் (RMSIR) சர்வதேச ரெகதா போட்டியில் மூன்று முதலிடங்களைப் பெறுவதை இலக்காக வைத்துள்ளது.

கடந்த ஆண்டில் பெற்ற நான்காம் இடத்தை மேம்படுத்த அவரும் 13 கப்பல் வீரர்களும் முயற்சிக்கிறார்கள் என்று ATM யூரானஸ் கப்பல் ஸ்கிப்பர், அதிகாரி வரன் 1 அஹ்மத் ஃபக்ரிசான் டெராமன் கூறினார் . “இந்த ஆண்டில் போட்டியாளர்கள் கடந்த ஆண்டுகளைவிட பலமாக இருக்கின்றனர், ஏனெனில் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் அனுபவமுள்ளவர்கள் மற்றும் பலர் முன்னாள் சாம்பியன்களாக இருந்துள்ளனர்.

“இவர்களின் பட்டியலில் புதிய உறுப்பினர்கள் இருப்பினும், இது எனக்கு பிரச்சனை அல்ல; முக்கியம் குழுவின் ஒத்துழைப்புதான்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பல நாடுகளிலிருந்து 28 குழுக்கள், இன்று தொடங்கும் 35-ஆம் ஆண்டுக்கான ராஜா மூடா சிலாங்கூர் சர்வதேச ரெகதா(RMSIR) போட்டியில் கலந்துக் கொள்கின்றனர். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த பந்தயம், கிள்ளான் துறைமுகத்திலிருந்து தொடங்கி பெராக் மாநிலம் பாங்கோர் தீவுக்கு செல்லும், பின்னர் பினாங் தீவுக்கு, இறுதியில் லங்காவி, கெடா தீவில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ராஜா மூடா சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா இந்த ஆண்டு போட்டியில் கலந்துகொள்கின்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.