ஷா ஆலாம், நவ 14- திறமையான மற்றும் போட்டித் தன்மை கொண்ட சுகாதார முன்வரிசை ஊழியர்களை உருவாக்குவதற்காக, சிலாங்கூர் முன்வரிசை பயிற்சியாளர் திட்டம் (Selangor Frontliner Apprenticeship - SELFA) என்ற புதிய திட்டத்தை மாநில அரசாங்கம் RM4.74 மில்லியன் ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இந்தத் திட்டம், சுகாதாரத் துறையில் உள்ள முக்கியமான படிப்புகளைப் பயில மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.இதில், சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (Unisel) மூன்று ஆண்டு காலப் படிப்புகளான டிப்ளோமா செவிலியம் (Nursing), பிசியோதெரபி (Physiotherapy), மருத்துவ படிமம் (Medical Imaging) மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (Medical Laboratory Technology) ஆகியவை அடங்கும்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பட்டம் பெறும் மாணவர்களுக்கு செல் கேட் மருத்துவமனை (Selgate Hospital) வலையமைப்பில் ஐந்து ஆண்டுகளுக்குப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கிடையில், சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (Selangor Technical Skills Development Centre - STDC), வாகனத் துறை நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தரத்திலான வாகனத் துறை கல்வி வசதிகளை உருவாக்க உள்ளது என்று அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் சுகாதார முன்வரிசை ஊழியர்களுக்காக SELFA பயிற்சித் திட்டம்: RM4.74 மில்லியன் ஒதுக்கீடு
14 நவம்பர் 2025, 10:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பந்திங் பள்ளியில் கத்திக் குத்து சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது
Shalini Rajamogun
8 ஜூலை 2026

national
தனியார் துறை மருத்துவக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்
Shalini Rajamogun
26 ஜூன் 2026

selangor
காப்பார் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் – மேரு சட்டமன்ற உறுப்பினர்
Shalini Rajamogun
10 ஜூன் 2026

selangor
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் பறவைகள் தொல்லை; தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்
Shalini Rajamogun
9 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?




