சிலாங்கூர் பட்ஜெட் 2026: நன்னெறி பொறுப்புணர்வு, புத்தாக்கம்,  மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்

14 நவம்பர் 2025, 8:05 AM
சிலாங்கூர் பட்ஜெட் 2026: நன்னெறி பொறுப்புணர்வு, புத்தாக்கம்,  மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்

ஷா ஆலாம், நவ 14- சிலாங்கூர் மாநிலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் என்பது வெறும் நிதி ஆவணம் மட்டுமல்ல, மக்களின் நலனை உறுதி செய்யும் அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பின் ஒரு கதை வடிவமாகும் என்று டத்தோ மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெறும் எண்கள் மட்டும் போதுமானதல்ல என்றும், ஒவ்வொரு கொள்கையும் மக்களுக்குப் புரியக்கூடிய மற்றும் உணரக்கூடிய ஒரு அர்த்தத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் டத்தோ மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள், மாநிலச் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது வலியுறுத்தினார்.

உண்மையான முன்னேற்றம் என்பது அமைப்புக்கு வெளியே இருந்து வருவதில்லை, மாறாக புதுமை, கற்றல் மற்றும் மனித வள மேம்பாட்டின் மூலம் உள்ளே இருந்தே வருகிறது. எனவே, அரசாங்கம் செலவினங்களை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், மக்களின் மனதில் புதுமைக்கான விதைகளை விதைக்கிறது.

சிலாங்கூர் சூழலில், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி ஆகியவற்றில் செய்யப்படும் ஒவ்வொரு முதலீடு வெறும் செலவு அல்ல, மாறாக மக்களின் எதிர்கால உற்பத்தி திறன் மற்றும் படைப்பாற்றல் செய்யப்படும் முதலீடு என்று அவர் கூறினார்.

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மாநிலத்தின் முன்னேற்றம் வெறும் எண்கள் மட்டுமல்ல, படைப்பாற்றல் திறன், ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் அர்த்தத்தாலும் தீர்மானிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையின் கதையை மீண்டும் எழுதுகிறது.

சிலாங்கூர் பட்ஜெட் 2026 இன் மையமாக மூன்று முக்கியக் கொள்கைகள் உள்ளன:

அனைவரையும் உள்ளடக்கியது (Keterangkuman): ஒவ்வொரு பொருளாதார முன்னேற்றமும் பின்னணி அல்லது பகுதியைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்தல்.

நெகிழ்ச்சித் தன்மை (Ketahanan): எந்தவொரு பொருளாதாரம், சமூக அல்லது சுற்றுச்சூழல் நெருக்கடியையும் எதிர்கொள்ள மாநிலத்தின் தாங்கும் சக்தியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

அர்த்தத்தின் அழகு (Keindahan Makna): ஒவ்வொரு கொள்கையும் செலவினமும் வெறும் எண்கள் இல்லாமல், மக்களின் தகுதியை உயர்த்தி, அர்த்தமுள்ள சமூகத் தாக்கத்தை வழங்குவதை உறுதி செய்தல்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.