ad

கிள்ளான் கம்போங் பாப்பான் குடியிருப்பாளர்கள் பாண்டமாரான் தொகுதி அலுவலகத்திலிருந்து உதவி பெறுமாறு கேட்டுக் கொண்டனர்

13 நவம்பர் 2025, 3:41 AM
கிள்ளான் கம்போங் பாப்பான் குடியிருப்பாளர்கள் பாண்டமாரான் தொகுதி அலுவலகத்திலிருந்து உதவி பெறுமாறு கேட்டுக் கொண்டனர்
கிள்ளான் கம்போங் பாப்பான் குடியிருப்பாளர்கள் பாண்டமாரான் தொகுதி அலுவலகத்திலிருந்து உதவி பெறுமாறு கேட்டுக் கொண்டனர்

ஷா ஆலம், நவம்பர் 12 - பாண்டமாரான் மாநில சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் டக் சீ, இப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டத்தால் பாதிக்கப் பட்டுள்ள கம்போங் பாப்பான், கிள்ளாங்கில் வசிப்பவர்களுக்கு உதவுவதற்கு உறுதியளித்துள்ளார்.குடியிருப்பாளர்களின் நலன் பாதுகாக்கப் படுவதை தனது அலுவலகம் உறுதி செய்யும் என்றும், எந்த ஒரு குடும்பமும் தகுந்த உதவிகளைப் பெறுவதில் இருந்து விடுபடாது என்றும் அவர் கூறினார்.

"அவர்களின்  வீடுகளை இடிப்பதை ஒத்திவைக்குமாறு டெவலப்பரை நான் கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு ஆரம்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளன."குடியிருப்பாளர்களுக்கு அருகிலுள்ள இடமாற்றத்தை பாதுகாப்பதற்காக சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்துடனும் (எல்பிஎச்எஸ்) நாங்கள் கலந்துரையாடினோம்" என்று லியோங் இன்று தொடர்பு கொண்டபோது மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காலியாக உள்ள வீடுகளை  மட்டுமே  இடிக்க டெவலப்பருக்கு மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டார் என்று அவர் மேலும் கூறினார்.இருப்பினும், இன்னும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகளை இடிப்பதைத் தொடர டெவலப்பர் விரும்புவதாக லியோங் கூறினார்.

இதுவரை, கம்போங் பாப்பான் குடியேறியவர்களுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை, ஆனால் நவம்பர் 11 தேதியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளபடி, டெவலப்பரால் அவர்களுக்கு ஏழு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் தகவல்களைப் பெறுவதற்கும் உத்தியோகபூர்வ உதவி சேனல்களை அணுகுவதற்கும் பாண்டமாரான் தொகுதி சேவை மையத்திற்குச் செல்லுமாறு அவர்களை வலியுறுத்தினார்.

முன்னதாக, பாண்டமாரான் கம்போங் பாப்பானில் உள்ள 20 வீடுகள் திங்கள்கிழமை (நவம்பர் 10) தொடங்கி டெவலப்பரின் புதிய திட்டத்திற்கு வழி வகுக்கும் வகையில் இடிக்கப் பட்டதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன. தெளிவான அறிவிப்பு இல்லாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சில குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டினர், மேலும் பணிகள் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த போதுதான் இடிப்பு குறித்து பலர் அறிந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.