ad

ஃபங்-வாங் புயல் எச்சரிக்கை - 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

11 நவம்பர் 2025, 9:16 AM
ஃபங்-வாங் புயல் எச்சரிக்கை - 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்
ஃபங்-வாங் புயல் எச்சரிக்கை - 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

தைவான், நவ 11- பிலிப்பைன்ஸ் நாட்டில் ஃபுங் வோங் சூறாவளி புயல் மையம் கொண்டிருந்த நிலையில் அங்கு பலத்த புயல்காற்று வீசியது. இதன் தாக்கம் தைவான் நாடு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு புயலால் பாதிக்கப்பட்ட தைவானின் மலைப்பாங்கான கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அதிக மழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படும் ஃபங்-வாங் (Fung-wong) புயல் வருகையை முன்னிட்டு, நிலப் பகுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை அன்று 3,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இந்தப் புயல் மிகவும் வலிமையான அமைப்பாக பிலிப்பைன்ஸைத் தாக்கியபோது 18 பேரைக் கொன்றது. தற்போது பலவீனமடைந்து வரும் ஃபங்-வாங் புயல், புதன்கிழமை அன்று தைவானின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுக நகரமான காவ்ஸியுங் (Kaohsiung) பகுதியை ஒட்டி நிலத்தைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.