ad

சிலாங்கூர் மாநில தெக்ஸ்பியர் உச்சி மாநாடு 2025; மாநில புத்தாக்க, இலக்கவியல் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும்

11 நவம்பர் 2025, 7:36 AM
சிலாங்கூர் மாநில தெக்ஸ்பியர் உச்சி மாநாடு 2025; மாநில புத்தாக்க, இலக்கவியல் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும்

கோலாலம்பூர், நவ 11- சிலாங்கூர் மாநில தெக்ஸ்பியர் உச்சி மாநாடு 2025 (Selangor Techsphere Summit 2025), நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வு, மலேசியாவின் டிஜிட்டல் கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்மார்ட் தொழில்துறை சூழல் அமைப்பில் பிராந்தியத் தலைவராக வேண்டும் என்ற இலக்குடன் இணைந்து, சிலாங்கூரின் இலக்கவியல் பொருளாதார நிகழ்ச்சி நிரலைப் பலப்படுத்துகிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உலகப் புகழ்பெற்ற வர்த்தக கண்காட்சியான ஹனோவர் மெஸ்ஸேயின் (Hannover Messe) அதிகாரப்பூர்வ ஆதரவுடன் நடத்தப்படும் இந்த சர்வதேச நிகழ்வு, நான்காவது தொழில்துறை புரட்சியை (Industry 4.0) வழிநடத்துவதிலும், நாட்டின் தொழில்துறை நிகழ்ச்சி நிரலை உந்துவதிலும் சிலாங்கூரின் தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

உலகளாவிய தொழில்துறை தலைவர்களுடன் அறிவுப் பகிர்வு மூலம், அதிநவீன உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதிக மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்க சிலாங்கூர் நோக்குகிறது.

அமிருடின் ஷாரியின் ஜெர்மன் ஹனோவர் மெஸ்ஸேவுக்கான முந்தைய வருகையின் விளைவாகத் தோன்றிய இந்த உச்சி மாநாடு, சிலாங்கூரின் உலகளாவிய நற்பெயரை வலுப்படுத்துகிறது மற்றும் சர்வதேச தொழில்நுட்ப ஆளுமைக்கு வழிவகுக்கிறது.

இத்தகைய உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிகழ்வை ஏற்பாடு செய்த முதல் மாநில அரசாங்கமாக சிலாங்கூர் வரலாறு படைத்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.