ad

நேம்வீயின் தடுப்பு காவல் நீட்டிப்பு

10 நவம்பர் 2025, 6:07 AM
நேம்வீயின் தடுப்பு காவல் நீட்டிப்பு

ஷா ஆலம், நவ 10: பிரபல மலேசிய ராப் பாடகர் வீ மேங் சி, அல்லது மேடைப்பெயராக அறியப்படும் நேம்வீ சமூக ஊடகப் பிரபல பெண்ணின் மரண சம்பவத்தை விசாரிக்க நவம்பர் 11 முதல் 13 வரை மூன்று நாள் தடுப்பு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீட்டிப்பு ஜாலான் கொன்லே பகுதியில் உள்ள பன்யன் ட்ரீ ஹோட்டல் அறையில் அக்டோபர் 22 அன்று நடந்த சம்பவத்தை முழுமையாக விசாரிக்க நீதிமன்றம் வழங்கியது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ பாடில் மார்சூஸ் தெரிவித்தார்.

விசாரணை பல கோணங்களில் நடைபெற்று வருகிறது, அதில் முக்கியமாக மரணத்திற்கு முன்பு அந்த பெண்ணுடன் இறுதியாக யார் இருந்தார் என்பதை கண்டறிதல் நடவடிக்கையும் அடங்கும். தகவல்படி, நேம்வீ தான் அந்த பெண்ணுடன் இறுதியாக இருந்த நபராகக் குறிப்பிடப்படுகிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.