ad

LEKAS மலைச்சரிவில் மனித எலும்புக்கூடு என நம்பப்படும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

8 நவம்பர் 2025, 9:37 AM
LEKAS மலைச்சரிவில் மனித எலும்புக்கூடு என நம்பப்படும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

நீலாய், நவம்பர் 8 – வடக்கு நோக்கி செல்லும் காஜாங்–சிரம்பான் அதிவேக நெடுஞ்சாலையில் 24.5 கிலோமீட்டர் பகுதியில் அமைந்த மலைச்சரிவில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த கண்டுபிடிப்பு குறித்து நவம்பர் 2 ஆம் தேதி காலை 11.35 மணியளவில் நெடுஞ்சாலை சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவரிடமிருந்து போலீசுக்கு தகவல் கிடைத்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் அப்துல் மாலிக் ஹாஷிம் தெரிவித்தார்.

“ஆரம்ப விசாரணையில், அங்கிருந்த எலும்புகள் குழுமமாக காணப்பட்டு அவை மனிதனுக்குச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது.

“அங்கிருந்து எந்தவித அடையாள ஆவணங்களும் கிடைக்கவில்லை. எனவே, மரணமடைந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இடத்தைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்விலும் குற்றச்சாட்டு சார்ந்த எந்த அடையாளமும் காணப்படவில்லை,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் குற்றவியல் நிபுணத்துவப் பிரிவுக்கு அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துடன், தனது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயிருந்தால் அல்லது சம்பவம் தொடர்பான தகவல் வைத்திருப்பவர்கள் யாரேனும் இருந்தால், போலீஸ் நிலையத்தை 06-7581222 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.