ad

திவெட் திட்டத்தை வலுப்படுத்துவதில் அரசு உறுதி

5 நவம்பர் 2025, 9:42 AM
திவெட் திட்டத்தை வலுப்படுத்துவதில் அரசு உறுதி

ஷா ஆலம், நவ 5 — தேசிய தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி கொள்கை 2030க்கு இணங்க தொழில்நுட்ப, தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சி (திவெட்) திட்டத்தை வலுப்படுத்துவதில் தனது உறுதிப்பாட்டை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் நோக்கம், உயர்தர திறனுடைய பணியாளர்களை உருவாக்கி, எதிர்கால தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்வதாகும்.

இத்திட்டத்திற்கு 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் RM7.9 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள 12 அமைச்சகங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் 673 பொது திவெட் நிறுவனங்களில் நடைபெறும் திட்டங்களை ஆதரிக்க பயன்படும் என துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் சைஹிட் ஹமிடி தெரிவித்தார்.

“இந்த நிதி ஒதுக்கீடு அமைச்சகத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப வழங்கப்படும். திவெட் திட்டங்களை வலுப்படுத்தும் திட்டமிடல், தற்போதைய நிர்வாக அமைப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சி திசைமாற்றத்துடன் இணைந்த வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் புதிய நிறுவனங்கள் மற்றும் பயிற்சி திட்டங்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் பல முக்கிய துறைகளில் திறமையான பணியாளர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என கிராமப்புற மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சருமான சைஹிட், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.