ad

மலேசியா, ஆசியா–பசிபிக் பிராந்தியத்தின் முக்கியமான தரவு மையமாக உருவாகும்

5 நவம்பர் 2025, 2:12 AM
மலேசியா, ஆசியா–பசிபிக் பிராந்தியத்தின் முக்கியமான தரவு மையமாக உருவாகும்

ஷா ஆலம், நவம்பர் 5: நாட்டின் புள்ளி விவர மையம் 2026க்கு பின் நான்கு மடங்கிற்கும் அதிகமாக விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலேசியா, ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியமான டிஜிட்டல் மையங்களின் ஒன்றாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தும்.

தற்போது நாட்டின் தரவுமையத்தின் திறன் சுமார் 835 மெகாவாட் (MW) ஆக உள்ளது, இது வரும் சில ஆண்டுகளில் 4,000 மெகாவாட்டை மீறும் என மதிப்பிடப்படுவதாக மலேசியாவின் மூலதன சந்தை மேலாளர் சம் சுன் கிட் கூறினார்.

ஜொகூர் தற்போது நுசாஜாயா மற்றும்செடனாக் தொழில்நுட்ப பூங்கா பகுதிகளில் வேகமான வளர்ச்சியால் ஒரு மூலதன மையமாக உருவெடுத்து வருகிறது. அதேசமயம் நீலாய் மற்றும் போர்ட் டிக்சனில் மலிவான நில விலைகள் காரணமாக புதிய தரவுமைய முதலீட்டாளர்களை நெகிரி செம்பிலான் ஈர்த்து வருகிறது.

இந்த துறை வளர்ச்சியை அரசாங்கத்தின் 2026 பட்ஜெட் ஊக்குவிக்கிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI), செமிகொண்டக்டர், மற்றும் நிலைத்த தொழில்நுட்பத்திற்கான ஊக்கங்கள் டிஜிட்டல் சொத்துகள் மற்றும் தொழில் தேவையை அதிகரிக்கின்றன.

அத்துடன், கடந்த அக்டோபரில் கையெழுத்தான மலேசியா–அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்கா டாலர் 150 பில்லியன் மதிப்பிலான உபகரணங்கள் வாங்கும் உறுதிப்பாடு மற்றும் புதிய தரவு பரிமாற்ற கொள்கையுடன் வெளிநாட்டு முதலீட்டை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். ஆற்றல் மற்றும் நீர் மூலாதாரங்களுக்கு அளிக்கப்படும் பெரிய முதலீடுகள் சர்வதேச முதலீட்டாளர்களின் ஆர்வத்தை தொடர்ச்சியாக ஈர்க்கும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.