எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பாப்பாராய்டு வீரமான் வாழ்த்து

4 நவம்பர் 2025, 1:59 AM
எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பாப்பாராய்டு வீரமான் வாழ்த்து
எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பாப்பாராய்டு வீரமான் வாழ்த்து

ஷா ஆலாம், நவ 4- சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள மலேசிய கல்வி சான்றிதழ் அல்லது SPM தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நவம்பர் 3 முதல் டிசம்பர் 23, 2025 வரை நடைபெறும் இந்தத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.தேர்வின் முழு காலப்பகுதியிலும் அனைத்து மாணவர்களும் முழு கவனம் செலுத்தி, ஆரோக்கியத்தைப் பேணி, அமைதியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

உங்களின் அனைத்து முயற்சிகளும் கடின உழைப்பும் சிறப்பான முடிவுகளை அளித்து, ஒளிமயமான எதிர்காலத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமையும் என்று நம்புகிறேன் என்று மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.