ad

எஸ்.பி.எம் மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

3 நவம்பர் 2025, 10:29 AM
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

ஷா ஆலம், நவ 3: இன்று தொடங்கிய 2025ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகள் தெரிவித்தார்.

“தன்னம்பிக்கையாக இருங்கள் மற்றும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மலேசியா மக்கள் அனைவரின் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கும்,`` என அவர் தெரிவித்தார்.

இறைவன் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்து, சிறந்த முடிவுகளைப் பெற வேண்டும்,” என்று அவர் தனது முகநூலில் பதிவில் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சகத்தின் (KPM) தகவலின்படி, நாடு முழுவதும் மொத்தம் 413,372 மாணவர்கள் 3 நவம்பர் முதல் 23 டிசம்பர் வரை 3,350 மையங்களில் தேர்வை எழுதவுள்ளனர்.

மேலும், 127,526 தேர்வு பணியாளர்கள் தேர்வு சீராக நடைபெற நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.