ad

கம்போங் ஜாவா நில உரிமை பிரச்சனைக்கு இன்று தீர்வுக் காணப்படும்

3 நவம்பர் 2025, 8:15 AM
கம்போங் ஜாவா நில உரிமை பிரச்சனைக்கு இன்று தீர்வுக் காணப்படும்

ஷா ஆலாம், நவ 3: மேற்குக் கடற்கரை விரைவுச்சாலை (WCE) திட்டத்துடன் தொடர்புடைய கிள்ளான் மாவட்டம், கம்போங் ஜாவா பகுதியில் எழுந்துள்ள நில உரிமை பிரச்சனைக்கு இன்று மாலை தீர்வு காணப்படும் என மாநில வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.

இந்த பிரச்சனை குறித்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மாநில அரசின் நிர்வாகக் கட்டிடத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்றார்.

“கடந்த வாரம் அமைச்சருடன் சேர்ந்து இந்த விஷயத்தை விவாதித்தோம். இன்று ஒரு முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

“WCE என்பது பொதுநலத்திற்கான திட்டம். நமக்கு WCE மற்றும் PLUS என்ற இரண்டு விரைவுச்சாலைகளும் தேவை.

அவற்றுக்கிடையிலான தூரம் சுமார் 150 மீட்டர் மட்டுமே. இந்த பிரச்சனைக்கான தீர்வை இன்று கூட்டத்தில் பேசுவோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, கம்போங் ஜாவா WCE பிரச்சனை குறித்து இறுதி கூட்டம் இன்று நடைபெறும் மற்றும் அதில் தீர்வு எடுக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த பிரச்சனை நீடித்து வருகிறது, ஏனெனில், 19 குடியிருப்பவர்கள் இன்னும் இடம்பெயர மறுத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான நில உரிமையாளர்கள் ஏற்கனவே இழப்பீடு பெற்றுள்ளனர்.

233 கிலோமீட்டர் நீளமுள்ள WCE விரைவுச்சாலை, பேராக் மாநிலத்தின் தைப்பிங்கையும் சிலாங்கூர் மாநிலத்தின் பந்திங்கையும் இணைக்கிறது. இதன் பாதையில் SKVE, NKVE, PLUS, NNKSB மற்றும் LATAR ஆகியவற்றை இணைக்கும் 21 சந்திப்புகள் உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.