ad

குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கையின் பயன்பாடு அரிதாகவே உள்ளது

31 அக்டோபர் 2025, 9:08 AM
குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கையின் பயன்பாடு அரிதாகவே உள்ளது

ஷா ஆலம், அக் 31 — குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கையை (CSR) பயன்படுத்துவது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், அதைப் பற்றியே சமூகத்தின் விழிப்புணர்வு இன்னும் குறைந்த நிலையிலேயே உள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இதை பெற்றோர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகக் கருதக்கூடாது என சாலை பாதுகாப்பு செயற்பாட்டாளர் ஷஹ்ரிம் தம்ரின் தெரிவித்தார்.

“குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கையை பயன்பாடு பற்றியே சமூகத்தின் விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது. நன்மைகள் குறித்த தகவல் பரிமாற்றம் அரிதாகவே நடைபெறுகிறது, மேலும், சட்டமும் தீவிரமாக அமலாக்கப்படவில்லை,” என்று அவர் மீடியா சிலாங்கூரின் பிச்சாரா சேமாசா நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கையை ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்க, விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் மற்றும் விதிமுறைகள் எனும் மூன்று முக்கிய அம்சங்கள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

“தொடர்ச்சியான தகவல் பரிமாற்றமும் நிலையான சட்ட அமலாக்கமும் இல்லையெனில், சட்டம் காகிதத்தில் மட்டுமே இருக்கும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இன்னும் பல பெற்றோர்கள், சாலையில் பயணம் செய்யும்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கையைப் பயன்படுத்துவது வழக்கமாக இல்லை என்றார்.

அதற்கான காரணங்களாக, அந்த பாதுகாப்பு சாதனத்தை பொருத்துவது சிரமமானது என நினைப்பது, சரியான இருக்கையைத் தேர்வு செய்வது குறித்து அறிவில்லாமை, அல்லது அதன் விலை அதிகம் எனக் கருதுவது ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (MIROS) வெளியிட்ட 2022ஆம் ஆண்டின் தரவின்படி, குழந்தைகள் பாதுகாப்பு இருக்கையின் பயன்பாடு சுமார் 30 சதவீதம் மட்டுமே உள்ளது.

காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 434 குழந்தைகள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர், அதாவது வாரத்திற்கு எட்டு குழந்தைகள் மரணம் அடைகின்றனர்.

இந்த நிலைமை, குழந்தைகளின் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் மேலும் விரிவான மற்றும் ஒட்டுமொத்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை காட்டுகிறது என்று ஷஹ்ரிம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.