ad

ஆயிரக்கணக்கான புத்தகங்கள், RM500 பரிசுகளுடன் சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி

31 அக்டோபர் 2025, 9:05 AM
ஆயிரக்கணக்கான புத்தகங்கள், RM500 பரிசுகளுடன் சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி

ஷா ஆலம், அக் 31 — ஆயிரக்கணக்கான புத்தகங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் மற்றும் தினசரி RM500 மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளுடன், சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF) இந்த ஆண்டும் மீண்டும் நடைபெறுகிறது.

செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (PPAS) ஒருங்கிணைக்கிறது. கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

உள்ளூர் மற்றும் சர்வதேச வெளியீட்டாளர்களின் புத்தகங்களுடன், எழுத்தாளர்களுடன் உரையாடல்கள், படைப்பாற்றல் பணிமனைகள் மற்றும் குடும்பங்கள் கலந்து கொள்ளக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இது புத்தக நேயர்களுக்கு தவறாமல் செல்ல வேண்டிய நிகழ்வாகும்.

தினசரி RM500 மதிப்புள்ள பரிசுக்காக, ஒவ்வொரு நாளும் 10 பேரை வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும். RM30-க்கு மேலான ஒவ்வொரு கொள்முதல் ஒன்றுக்கும் ஒரு நுழைவு உரிமை வழங்கப்படும். வெற்றியாளர்கள் ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மற்றும் 8.30 மணிக்கு அறிவிக்கப்படுவார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள், வெளியீட்டாளர் பட்டியல் மற்றும் சிறப்பு கூட்டாண்மைகள் விரைவில் அறிவிக்கப்படும். மேல் தகவல்களுக்கு PPAS-ன் அதிகாரப்பூர்வ தளங்களை பின்தொடருங்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.