ad

FRU லாரி விபத்து; மணல் லாரி அதிக எடை காரணம்

31 அக்டோபர் 2025, 9:00 AM
FRU லாரி விபத்து; மணல் லாரி அதிக எடை காரணம்

புத்ராஜெயா, அக் 31 — இந்த ஆண்டு மே 13 அன்று பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தானில் மணல் ஏற்றிய ஒரு லாரி FRU லாரி மோதியதில் ஏற்பட்ட உயிர்ப்பலி விபத்தின் முக்கிய காரணம், அந்த லாரி அனுமதிக்கப்பட்ட எடையின் 70 சதவீதத்திற்கும் அதிகமான சரக்கை ஏற்றியதால்தான் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிக எடையால் லாரி கட்டுப்பாட்டை இழந்தது, இதனால் ஈப்போவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த FRU லாரியுடன் மோதியது என இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் வாகனத்தின் பிரேக் மற்றும் ஸ்டியரிங் அமைப்புகளில் எந்தவித இயந்திரக் கோளாறும் இல்லை. விபத்து நடைபெற்றது லாரி இயக்கம் மற்றும் விதிமுறை மீறல் ஆகியவை காரணமாகும்.

இந்த அறிக்கை, விபத்தின் காரணத்தை கண்டறிந்து, நாட்டின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்மொழிவதற்காக அமைச்சரவை உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவால் தயாரிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு விசாரணையின் நோக்கம் எவரையும் குற்றம் சாட்டவோ அல்லது சட்டப் பொறுப்பு நிர்ணயிக்கவோ அல்ல, மாறாக நிலப் போக்குவரத்து பாதுகாப்பு கொள்கைகளை வலுப்படுத்தி இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்குவதற்காகும் என்று கூறியது.

மே 13 அன்று காலை 8.54 மணியளவில் நடந்த அந்த விபத்தில், FRU உறுப்பினர்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.