ad

சாலை விபத்தில் வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

29 அக்டோபர் 2025, 6:56 AM
சாலை விபத்தில் வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

ஜோர்ஜ் டவுன், அக் 29 — சாலை விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு வயது மகள் கடுமையாகக் காயமடைந்தார். சுல்தான் அஸ்லான் ஷா சாலையில் சாலை கடக்கும்போது, ஒரு SUV வாகனம் அவர்களை மோதியது.

இரவு 8.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 40 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என வடகிழக்கு மாவட்டக் காவல்துறை தலைவர் ஏ.சி.பி. அப்துல் ரோசாக் முகமட் தெரிவித்தார்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 57 வயதான உள்ளூர் ஆண் ஓட்டுநர் சுங்காய் டுவாவில் உள்ள தனது வீட்டிலிருந்து பினாங்கு சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இச்சம்பவத்தில் ஓட்டுநர் காயமடையவில்லை. மேலும், இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டப் பிரிவு 41(1)ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

— பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.