ad

இந்திய தூதர் சிலாங்கூர் மாநிலத்தின் தலைமைத்துவத்தை பாராட்டினார் –இது  இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் ஒத்துழைப்பாக புகழ்ந்தார்.

23 அக்டோபர் 2025, 5:58 AM
இந்திய தூதர் சிலாங்கூர் மாநிலத்தின் தலைமைத்துவத்தை பாராட்டினார் –இது  இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் ஒத்துழைப்பாக புகழ்ந்தார்.
இந்திய தூதர் சிலாங்கூர் மாநிலத்தின் தலைமைத்துவத்தை பாராட்டினார் –இது  இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் ஒத்துழைப்பாக புகழ்ந்தார்.
இந்திய தூதர் சிலாங்கூர் மாநிலத்தின் தலைமைத்துவத்தை பாராட்டினார் –இது  இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் ஒத்துழைப்பாக புகழ்ந்தார்.

ஷா ஆலம் அக்டோபர் 22: மலேசியாவிற்கான இந்திய தூதர் பி. என். ரெட்டி, சர்வதேச ஒத்துழைப்பு மூலம் புதுமை மற்றும் திறன் வள மேம்பாட்டை முன்னெடுத்து வரும் சிலாங்கூர் மாநில அரசின்  தலைமைத்து-வத்தையும் தொலைநோக்கு பார்வையையும்  பாராட்டினார்.

இன்று நடைபெற்ற இந்திய தொழில் நுட்ப நிறுவனம் (IIT) மதராஸ் மற்றும் சிலாங்கூர் மாநிலம் ஆதரவு வழங்கும் மலேசிய மேம்பட்ட  குறைக்கடத்தி சாதன  சிப் அகாடமி (Asem) ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தப் புரிந்துணர்வு (MOU) கையொப்ப விழா, மலேசியா-இந்தியா உறவுகளில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அவர் விவரித்தார்.

மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்ட நிகழ்வில் பேசுகையில், “இந்த ஒத்துழைப்பு குறைக்கடத்தி சாதன சிப் துறையில் மலேசியா மற்றும் இந்தியா அரசுகளுக்கிடையேயான கூட்டாண்மையை மேம்படுத்தும் முக்கிய அடித்தளமாகும்.” என ரெட்டி  கூறினார்.

குறைக்கடத்தி சாதன சிப் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான அரசு-அரசு அளவிலான ஒப்பந்தம் உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன; இது இந்த துறையின் மூலாதார முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.” என ரெட்டி மேலும் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் அரசு உரையாடலைச் செயலாக மாற்ற  முன்னேற்றமான அணுகுமுறையை   எடுத்துள்ளது.   “இன்றைய நிகழ்வு செயல் வடிவம் காணும் ஒப்பந்தத்திற்கான அடையாளம் ஆகும். இந்த முயற்சியின் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி ஒத்துழைப்பையும் கூட்டு நடவடிக்கைகளின் துவக்கத்தையும் காணப்போகிறோம்,” என அவர் குறிப்பிட்டார். 

IIT மதராஸ் மற்றும் Asem இடையேயான ஒத்துழைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  இந்தியாவுக்கு செய்த உத்தியோகபூர்வ பயணத்தின் பின், இந்தியா-மலேசியா உறவை விரிவான மூலோபாய கூட்டாண்மையாக  உயர்த்தியுள்ளதைக் காட்டுகிறது.

இப்பயணம் இரு நாடுகளுக்கிடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புதிய வாயில்களைத் திறந்துள்ளது. இந்தியாவின்   குறைக்கடத்தி சாதன சிப்  துறையில் USD 30 பில்லியன் (RM126.9 பில்லியன்) முதலீட்டினை உள்ளிட்டிருப்பதை வலியுறுத்தினார் — இதன் மூலம் குறைக்கடத்தி சாதன சிப்  மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி, மின்னணு உற்பத்தி போன்ற துறைகள் வலுப்பெறுகின்றன. “இந்தியாவின் நோக்கம்  குறைக்கடத்தி சாதன சிப்  தொழில்- துறையின் உலகளவிய முழுமையான மதிப்புச் சங்கிலியையும் தன்னோடு  கொண்டிருப்பதாகும்,” என்று அவர் கூறினார்.

அவர் எடுத்துக்காட்டாக டாடா எலெக்ட்ரானிக்ஸ் USD10 பில்லியன் (RM42.3 பில்லியன்) முதலீடும், மைக்ரான் USD2.7 பில்லியன் (RM11.42 பில்லியன்) திட்டத்தையும் குறிப்பிட்டார்.   மதராஸ் IIT  கல்வி நிறுவனம் புதுமை மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவை முன்னெடுக்கும் சிறந்த மாதிரி — அங்குள்ள 450-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்புகள் USD 6.5 பில்லியன் (RM27.49 பில்லியன்) மதிப்பில் உள்ளன.

“IIT மதராஸ் ஆராய்ச்சி, கல்வி, தொழில் மற்றும் புத்தாக்க உரிமை வணிகமயமாக்கலை ஒருங்கிணைத்துள்ள ஒரு புதுமை சூழலை உருவாக்கியுள்ளது,” என்றார் ரெட்டி. Asem குறைக்கடத்தி சாதன சிப் திறன்களை மேம்படுத்தும் உள்ளூர் திறமைகளுக்கு  அதிகாரமளிக்கும் வலுவான நிறுவனமாக வளர்ந்திடும் என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த ஒத்துழைப்பு வெறும் நிறுவனங்களைப் பற்றியது அல்ல — இது இந்தியா மற்றும் மலேசியாவை இணைக்கும் பாலமாகும்; தொழிலும் கல்வியும், இன்றைய திறமையும் நாளைய வாய்ப்புகளும் ஒன்றாக இணைவதற்கான மேடையாகும்,” என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.