சிலாங்கூர் பருவமழைக்கு தயாராகிறது, மக்கள் விழிப்புடன் இருக்க நினைவு

22 அக்டோபர் 2025, 4:52 AM
சிலாங்கூர் பருவமழைக்கு தயாராகிறது, மக்கள் விழிப்புடன் இருக்க நினைவு

ஷா ஆலம், அக்டோபர் 22: நவம்பர் மாதம் முதல் சிலாங்கூரில் கனமழை பெய்யும் என்று சிலாங்கூர் காலநிலை மாற்றம் தழுவல் மையம் (SCAC) தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் அரசு துறைகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கும் மலேசியா வானிலைத் துறையான மெட் மலேசியா, நீர்வள மற்றும் வடிகால் துறை, பொதுப்பணித்துறை ஆகியவைக்கு கவனம் செலுத்துமாறு SCAC பொதுமக்களை அறிவுறுத்துகிறது.

“மக்கள் தொடர்ச்சியான மழை அல்லது கனமழை, கடல் நீர் மட்டம் உயர்வுடன் ஒரே நேரத்தில் ஏற்படும் வாய்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்று SCAC மீடியா சிலாங்கூருக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகள் மற்றும் கடற்கரை அருகில் குடியிருப்பவர்கள் பெரும் அலைகள் ஏற்படும் தேதிகளை அறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நினைவூட்டியுள்ளது. அதே நேரத்தில், SCAC சுற்றுப்புற சுத்தத்தைக் காக்கும் முக்கியத்துவத்தையும், வடிகால் அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் தேவையையும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் திடீர் வெள்ளப் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

வடிகால் அல்லது நீரேற்றக் குழாய்கள் அடைப்பு ஏற்பட்டால், பொதுமக்கள் உடனடியாக உள்ளூர் ஆணையத்திடம் புகார் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும், மழைக்காலத்தை எதிர்கொள்ளும் நோக்கில் மக்கள் அடிப்படை பாதுகாப்புக் கருவிகள், முக்கிய ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்தல் மற்றும் தேவையான அளவு உணவு மற்றும் மருந்துகளை சேமித்து வைக்குமாறு SCAC பரிந்துரைத்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.