ad

கூர்மையான பொருளால் இளம் பெண்ணை தாக்கிய வழக்கில் சந்தேக நபர் கைது

21 அக்டோபர் 2025, 6:15 AM
கூர்மையான பொருளால் இளம் பெண்ணை தாக்கிய வழக்கில் சந்தேக நபர் கைது

ஷா ஆலம், அக் 21: ஜாலான் டாங்கா பத்து, தஞ்சோங் கிளிங் மலாக்கா பகுதியில் ஒரு இளம் பெண் கூர்மையான பொருளால் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஆடவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

19 வயது இளம் பெண் நேற்று மாலை டாங்கா பத்து சேக்சன் 1 பகுதியில், அடையாளம் தெரியாத ஒருவரால் கூர்மையான பொருளால் தாக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் காயமடைந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் கிறிஸ்டோபர் பாட்டிட் உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்டவர் தன் அண்ணியின் மனைவி ஓட்டிய மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து, இருவரும் பணியாற்றி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.