கோலாலம்பூர், அக் 17 — இன்று மாலை 7 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு துறையான மெட்மலேசியா கணித்துள்ளது.
அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், இதே போன்ற வானிலை பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், பாஹாங் ஆகிய மாநிலங்களிலும், மேலும் சில கிழக்கு மாநிலங்களான கிளந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய இடங்களிலும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும் மற்றும் ஒவ்வொரு வெளியீட்டிற்கும் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்ஆகும்.
பொதுமக்கள் மெட்மலேசியாவின் இணையதளமான www.met.gov.my- பார்வையிடவும் அல்லது சமூக ஊடகங்களைப் பின்தொடரவும், மேலும் myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.