ad

சிலாங்கூரில் தீபாவளி “ஜோம் ஷாப்பிங்” வவுச்சர்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது

12 அக்டோபர் 2025, 3:42 AM
சிலாங்கூரில் தீபாவளி “ஜோம் ஷாப்பிங்” வவுச்சர்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது
சிலாங்கூரில் தீபாவளி “ஜோம் ஷாப்பிங்” வவுச்சர்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது

ஷா ஆலாம், அக்டோபர் 12: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு “ஜோம் ஷாப்பிங் பெரயான்” வவுச்சர்கள் மாநிலம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளின் சேவை மையங்கள் வழியாக தீவிரமாக வழங்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி தெரிவித்ததாவது, 400 தகுதியான நபர்கள் தலா RM200 மதிப்புள்ள வவுச்சர்களை ஸ்ரீ கம்பாங்கனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற நிகழ்வில் பெற்றுக்கொண்டனர்.

“இந்த திட்டம் மாநில அரசின் முயற்சியாகும். இதன் நோக்கம் தீபாவளிக்கான தயாரிப்புகளை மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ள வகையிலும் செய்ய மக்களுக்கு உதவுவதாகும்,” என்று அவர் கூறினார்.

அப்பாஸ் மேலும் தெரிவித்ததாவது, சிலாங்கூர் மகளிர் நலன் மற்றும் சேவை அமைப்பு (Pekawanis) சார்பிலும் 20 நபர்களுக்கு தீபாவளி நன்கொடைகள்  வழங்கப்பட்டதாகவும், இது சமூகத்திற்கான அன்பு மற்றும் அக்கறையின் அடையாளமாகும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெர்ன் ஃபே தெரிவித்ததாவது, அவரது தொகுதியில் கடந்த வியாழக்கிழமை 300 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டதாகவும், மேலும் வவுச்சர் பெறாத 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவுக் கூடை நன்கொடைகள்  வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

“இந்த உதவி அனைத்து பெறுநர்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் பண்டிகை ஆனந்தத்தை தரும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பத்து தீகா தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷீத் ஹரோன் கூறியதாவது, இந்த முயற்சி செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கியதிலிருந்து 580 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், ஆனால் ஒதுக்கீட்டின்படி 450 நபர்களுக்கே வவுச்சர்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“அனைவரும் பெற முடியாதபோதிலும், இந்த ஆண்டில் பெறுநர்கள் 50 பேர் அதிகரித்துள்ளனர் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் காண்கிறோம்,” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், பண்டார் உத்தமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுத்தீன் தெரிவித்ததாவது, 200 நபர்கள் அடுத்த வாரம் தீபாவளி ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் பெறுவார்கள் என்றும், அந்த நிகழ்வில் பண்டார் உத்தமா இந்தியக் குழு தலைவர் பரம்ஜீத் சிங் கலந்து கொள்வார் என்றும் கூறினார்.

“இந்த முயற்சி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சிகரமாக்கவும், பண்டிகை தயாரிப்புகளில் உதவவும் அமைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சமீபத்தில், வறுமை ஒழிப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு தெரிவித்ததாவது, தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் RM200 மதிப்புள்ள 22,000க்கும் மேற்பட்ட ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறைந்த வருமான குடும்பங்கள் தீபாவளி பொருட்களை வாங்க உதவும் நோக்கத்துடன் வழங்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டிலிருந்து, இந்த வவுச்சரின் மதிப்பு RM100-இல் இருந்து RM200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.