ad

வெள்ளப் பெருக்கு குறித்து விழிப்புடன் இருக்க அறிவுறுத்து

6 அக்டோபர் 2025, 10:09 AM
வெள்ளப் பெருக்கு குறித்து விழிப்புடன் இருக்க அறிவுறுத்து

ஷா ஆலம், அக் 6: கோலா லங்காட்டில் உள்ள குடியிருப்பாளர்கள் அக்டோபர் 6 முதல் அக்டோபர் 11 வரை வெள்ளப் பெருக்கு குறித்து விழிப்புடன் இருக்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.

எந்தவொரு பாதுகாப்பு அபாயங்களையும் தவிர்க்க, முன்கூட்டியே தயாராக இருக்கவும், சமீபத்திய முன்னேற்றங்களைப் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகக் கோலா லங்காட் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

"பொதுமக்கள் எப்போதும் கவனமாக இருக்கவும், எந்தவொரு சாத்தியக்கூறுகளையும் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

தற்காலிக தங்கும் மையத்திற்கு (PPS) செல்ல நேரிட்டால் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்" என ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடலோரப் பகுதியில் நீச்சல், சுற்றுலா, முகாம், மீன்பிடித்தல் மற்றும் படகு சவாரி போன்ற அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதையும் கோலா லங்காட் நகராண்மை கழகம் நினைவூட்டுகிறது.

இதற்கிடையில், ஏதேனும் அவசரநிலை அல்லது உடனடி உதவிக்கு, பொதுமக்கள் 03-3182 2565 (மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு), 012-300 4256 (MPKL அவசரநிலை) அல்லது 012-300 4130 (புகார் ஹாட்லைன்) என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.