ad

ரக்பி விளையாட்டின்போது மாணவர் திடீர் மரணம்.

4 அக்டோபர் 2025, 11:35 AM
ரக்பி விளையாட்டின்போது மாணவர் திடீர் மரணம்.
ரக்பி விளையாட்டின்போது மாணவர் திடீர் மரணம்.

ஈப்போ, அக். 4-  ரக்பி போட்டியில் பங்கேற்ற ஒரு மாணவரின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து 2025 தேசிய உறைவிடப் பள்ளி  ரக்பி எழுவர் வெற்றியாளர் கிண்ண ரக்பி போட்டியை  ரத்து செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொண்ட கல்வி அமைச்சு, மாணவரின்  மறைவுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் போட்டியை நாளை வரை ரத்து செய்து மீண்டும்  முடிவு செய்யப்பட்டுள்ளதாக  இன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது.

போட்டியின் போது திடீரென  மயங்கி விழுந்த அம்மாணவர் சம்பவ இடத்தில்  பணியில் இருந்த மருத்துவக் குழுவினரால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் இறந்துவிட்டது மருத்துவர்களால்  உறுதிப்படுத்தப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.