அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகப் பெட்டாலிங் தேர்வு

2 அக்டோபர் 2025, 9:06 AM
அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகப் பெட்டாலிங் தேர்வு

கோலாலம்பூர், அக் 2 - இந்த ஆண்டு சிலாங்கூரில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகப் பெட்டாலிங் திகழ்கிறது.

அதாவது 2.4 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து ஜோகூர் பாரு (1.8 மில்லியன்) மற்றும் உலு லங்காட் (1.5 மில்லியன்) ஆகியவை உள்ளன என்று புள்ளிவிவரத் துறை இன்று வெளியிட்ட அதன் தற்போதைய மக்கள்தொகை மதிப்பீடுகள், நிர்வாக மாவட்டம், 2025இல் தெரிவித்துள்ளது.

"கிளந்தானில் உள்ள கெச்சில் லோஜிங் 3.6 சதவீத வளர்ச்சி விகிதத்தையும், அதைத் தொடர்ந்து மாராங், திரங்கானு (1.6 சதவீதம்) மற்றும் கெமாமன், திரங்கானு (1.4 சதவீதம்) ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் புக்கிட் மாபோங், சரவாக் 10,700 என்ற மிகக் குறைந்த மக்கள்தொகையையும், அதைத் தொடர்ந்து சாங், சரவாக் (10,400) மற்றும் தஞ்சோங் மானிஸ், சரவாக் (7,900) என பதிவு செய்துள்ளன.

"2025ஆம் ஆண்டில் கிளந்தானில் உள்ள மூன்று மாவட்டங்கள் 0 முதல் 14 வயது வரையிலான இளம் மக்கள்தொகையின் அதிகபட்ச பங்கைப் பதிவு செய்தன. அவை குவா முசாங் (32.4 சதவீதம்), கெச்சில் லோஜிங் (31.9 சதவீதம்) மற்றும் தும்பாட் (31.6 சதவீதம்) ஆகியவை அடங்கும்," என்று தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ முகமது உசிர் மஹிடின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், 10 மாவட்டங்கள் வயதானவர்களாக அதிகம் உள்ளவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் 7 சதவீதத்தை எட்டியுள்ளனர்.

அவை சிரம்பான் (நெகிரி செம்பிலான்), ஜெராண்டுட் மற்றும் குவாந்தன் (பகாங்), குளுவாங் மற்றும் பொந்தியான் (ஜோகூர்), அலோர் காஜா (மலாக்கா), பச்சோக் (கிளந்தான்), செபராங் பெராய் செலாந்தான் (பினாங்கு), சுபிஸ் (சரவாக்), மற்றும் கெனிங்காவ் (சபா) ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.