ad

இதுவரை BUDI95 திட்டத்தில் மூன்று மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர்

1 அக்டோபர் 2025, 4:58 AM
இதுவரை BUDI95 திட்டத்தில் மூன்று மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர்

கோலாலம்பூர், அக் 1 - BUDI95 திட்டம் செயல்படத்தப்பட்ட நான்கே நாட்களில், கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பயனர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதன் விற்பனை RM91 மில்லியனைத் தாண்டியுள்ளது என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

நேற்று மாலை 6 மணி வரையில், சுமார் 2 மில்லியன் மக்கள் RON95 பெட்ரோலை RM1.99 மானிய விலையில் வாங்கியுள்ளனர்.

எந்த தங்கும் தடையும் இன்றி திட்டம் சிறப்பாக நடைபெறுவதாகவும், குறைந்த விலையில் எரிபொருள் கிடைப்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாகனங்களை இயக்கி, போக்குவரத்தும் அதிகரித்ததாக அவர் கூறினார்.

சபா மற்றும் சரவாக் பகுதிகளில் படகு உரிமையாளர்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும், ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கும் மேற்போகாதவர்களுக்கு தளர்வு வழங்குவது குறித்தும் ஆராயப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.