ad

போக்குவரத்து குற்றங்களுக்கான எச்சரிக்கைகள் நிறுத்தப்படும்

29 செப்டெம்பர் 2025, 4:08 AM
போக்குவரத்து குற்றங்களுக்கான எச்சரிக்கைகள் நிறுத்தப்படும்

ஷா ஆலம், செப் 29 — கோலாலம்பூரில் போக்குவரத்து குற்றங்களுக்கான எச்சரிக்கைகளை வெளியிடுவதை அக்டோபர் 1 முதல் காவல்துறையினர் நிறுத்துவார்கள். மேலும் Ops Pematuhan Undang-Undang (Ops PUU) இன் கீழ் கடுமையான அமலாக்கம் பின்பற்றப்படும் என்று தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 6 ஆம் தேதி விழிப்புணர்வு கட்டத்துடன் தொடங்கிய இந்த நடவடிக்கையில் ஏற்கனவே 60,596 எச்சரிக்கை நோட்டிஸ்கள் வெளியிடப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.

“அக்டோபர் 1 முதல், நாங்கள் இனி எந்த எச்சரிக்கைகளையும் வெளியிட மாட்டோம். அதற்கு பதிலாகக், குற்றப் புரிபவர்கள் மீது கடுமையான மற்றும் உடனடி அமலாக்க நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.

பெரும்பாலான குற்றங்களில் போக்குவரத்து இடையூறு மற்றும் சாலை விதிமுறைகளை பின்பற்றத் தவறியது ஆகியவை அடங்கும்.

பாதசாரிகள் நடைபாதைகளைப் பயன்படுத்தாதது, சட்டவிரோத வாகன எண்கள், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட்களை அணியாதது, மஞ்சள் அடையாளத்தில் வாகனத்தை நிறுத்துவது மற்றும் மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைத்தல் ஆகியவை பிற மீறல்களாகும்.

நகர காவல்துறை போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைமையிலான Ops PUU, ஜாலான் லோக் யூ, ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் பி ராம்லீ மற்றும் ஜாலான் துன் ரசாக் போன்ற அதிக போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.

இந்த முயற்சி நீண்டகால சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நெரிசலைக் குறைத்தல் மற்றும் குற்றங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஃபாடில் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.