நியூயார்க், செப். 28- மத்திய கிழக்கில் ஸியோனிச ஆட்சியின் மிருகத்தனம் தொடர அனுமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்திய மலேசியா, இஸ்ரேல் மீது ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவையின் விவாதத்தில் நாட்டின் தேசிய அறிக்கையை வாசித்த வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், கத்தார் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் ஒரு சில ஹமாஸ் பிரதிநிதிகள் மீதான தாக்குதல் மட்டுமல்லாது மற்றொரு நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும் சமரச முயற்சிகளை அவமதிப்பதாகவும் உள்ளது எனக் கூறினார்.
இஸ்ரேலின் வன்முறை பிராந்தியத்தை தொடர்ந்து
சீர்குலைக்கும் என்பதை இந்த தாக்குதல் சமிக்ஞை செய்வதாக கூறிய அவர், இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவுகள் தவிர்க்க முடியாமல் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவும் என எச்சரித்தார்.
கொடூரச் செயல்கள் பாலஸ்தீனத்தில் தொடங்கியிருக்கலாம். ஆனால் அவை நிச்சயமாக பாலஸ்தீனத்துடன் முடிவடையாது. மத்திய கிழக்கு அதன் குடியிருப்பாளர்களுக்கு மேலும் மேலும் ஆபத்தானதாக வளர்ந்து வருவதால் உலகம் முழுவதும் அதன் எதிரொலிகளை நாம் உணர்வோம். இதனால்தான் இரு நாட்டுத் தீர்வுக்காக வாதிடுவது மட்டும் போதாது என்று அவர் கூறினார்.
நியூயார்க் பிரகடனம் உட்பட எந்தவொரு நடவடிக்கையிலும் பாலஸ்தீனர்களை ஆதரிப்பதற்கான மலேசியாவின் உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஆக்கிரமிப்புப் படைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுயாட்சி பெற்ற பாலஸ்தீன அரசின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு நீண்டகால அடிப்படையில் ஆதரவு வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் முகமது கூறினார்
இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடை- புத்ராஜெயா வலியுறுத்து
28 செப்டெம்பர் 2025, 10:29 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?





