ad

தட்சணாமூர்த்திக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

25 செப்டெம்பர் 2025, 9:06 AM
தட்சணாமூர்த்திக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

கோலாலம்பூர், செப் 25 — சிங்கப்பூரில் ஹெராயின் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மலேசியாவை சேர்ந்த தட்சணாமூர்த்திக்கு இன்று மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக குடியரசு அதை ஒத்திவைக்க முடிவு செய்த போதிலும், பிற்பகல் 3 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவரது குடும்பத்தினர் சிங்கப்பூர் ஜனாதிபதியிடம் பலமுறை கருணை மனுக்களை சமர்ப்பித்தனர். ஆனால் அவை தோல்வியடைந்தன.

குடியரசின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின்படி, 39 வயதான அவர் கடத்தல் நோக்கத்திற்காகக் குறைந்தது 44.96 கிராம் டயமார்ஃபின் அல்லது ஹெராயினை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

சிங்கப்பூரின் போதைப்பொருள் துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ், 15 கிராமுக்கு மேல் டயமார்ஃபின் கடத்துவது கட்டாய மரண தண்டனையை விதிக்கிறது.

தட்சணாமூர்த்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் ஏப்ரல் 15, 2015 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு மற்றும் தண்டனைக்கு எதிரான அவரது மேல்முறையீடு பிப்ரவரி 5, 2016 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.