ad

அனுமதியின்றி ஆயர் ஈத்தாம் வனப்பகுதிக்குள் நுழைந்த 152 நபர்கள் கைது

23 செப்டெம்பர் 2025, 10:05 AM
அனுமதியின்றி ஆயர் ஈத்தாம் வனப்பகுதிக்குள் நுழைந்த 152 நபர்கள் கைது

ஷா ஆலம், செப் 23: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக அனுமதியின்றி பூச்சோங்கில் உள்ள ஆயர் ஈத்தாம் வனப்பகுதிக்குள் (HSAI) நுழைந்த குற்றத்திற்காக 152 நபர்களை சிலாங்கூர் மாநில வனத்துறை (JPNS) கைது செய்துள்ளது.

இந்த கைதுகள் ஜனவரி, பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக JPNS துணை இயக்குநர் (வன நடவடிக்கைகள்) முகமட் நோர் ஃபிர்தௌஸ் ரஹீம் தெரிவித்தார்.

“தேசிய வனவியல் சட்டம் 1985இன் பிரிவு 47, எனெக்மன் (Pemakaian) இன் கீழ் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவது குற்றம்.

“குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM30,000க்கு மிகாமல் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,” என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு தகவல் அளித்தார்.

சமூக ஊடகங்களில் இணைய பயனர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ள ஆயர் ஈத்தாம் வனப்பகுதியின் அழகு, பார்வையாளர்கள் மற்றும் மலையேறுபவர்களால் அடிக்கடி காட்டுக்குள் நுழைய வழிவகுத்துள்ளது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.