ad

மோசமான நிதி மேலாண்மை அரசு ஊழியர்கள் திவாலானவர்களாக அறிவிக்கப்படுவதற்கான காரணம்

22 செப்டெம்பர் 2025, 6:11 AM
மோசமான நிதி மேலாண்மை அரசு ஊழியர்கள் திவாலானவர்களாக அறிவிக்கப்படுவதற்கான காரணம்

ஷா ஆலம், செப் 22 : மோசமான நிதி மேலாண்மை மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை ஆகியவை பல அரசு ஊழியர்கள் திவாலானவர்களாக அறிவிக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

சரியான மற்றும் கட்டமைக்கப்பட்ட நிதி மேலாண்மை அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க உதவும் என்று 'Financial Gory' என்று நன்கு அறியப்பட்ட அஸ்ரேய் முகமட் கூறினார்.

"அரசு ஊழியர் கட்டமைப்பில், அவர்களுக்கு நிலையான சம்பளத்துடன் கூடிய வேலைகள் உள்ளன. ஆனால், அவர்கள் திவாலானவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். இதன் முக்கிய காரணங்களில் மோசமான நிதி மேலாண்மையும் அடங்கும்.

"வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்று நாம் கூறினால், அது முக்கியக் காரணம் அல்ல, ஏனெனில், நிலையான சம்பளம் இல்லாத பலர் இன்னும் திவாலாகாமல் இருக்கின்றனர்," என்று மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

'பிந்தங்கி விடுவோம் என்ற பயம்' (FOMO) மற்றும் சக ஊழியர்களைப் பின்தொடர்வது போன்ற அறிகுறிகள் பல அரசு ஊழியர்களை கடனில் தள்ளுகின்றன என்று அஸ்ரேய் விளக்கினார்.

இந்த காரணிகள் அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.