தோக்கியோ, செப். 20 - இம்மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க ஜப்பான் திட்டமிடவில்லை என்று அதன் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா நேற்று தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான இரு நாட்டுத் தீர்வை ஆதரிக்கும் தோக்கியோவிற்கு பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதா இல்லையா என்பது முக்கியமல்ல. மாறாக, அதை எப்போது அங்கீகரிப்பது என்பதுதான் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கக் கோரும் குரல்கள் அனைத்துலக சமூகத்திலும் ஜப்பானிலும் உரக்க ஒலித்து வருவதை நான் அறிவேன்.
ஆனால் இரு நாட்டுத் தீர்வுக்கு உண்மையில் என்ன வழி என்பதை கடுமையாக ஆராய்வதற்கும் அந்த திசையில் அரசதந்திர முயற்சிகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது என்று ஐவயா செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
அடுத்த வாரம் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுப் பேரவையில் உலகத் தலைவர்கள் கூடும்போது, காசாவிற்கு கூடுதல் உதவிகளை அனுமதிக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் நம்பிக்கையில் அமெரிக்காவின் ஒரு சில நட்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராகி வருகின்றன.
நீண்டகால அமைதியை நாடும் வகையில் காசாவிற்கு கூடுதல் உதவிகளை வழங்குவதை அனுமதிக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் நம்பிக்கையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
காசாவில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது போன்ற இஸ்ரேலின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை ஜப்பான் ஒருபோதும் மன்னிக்காது என்பதோடு இரு நாடுகள் தீர்வை அடைவதற்கான வழியை மூடும் வகையில் இஸ்ரேல் நடவடிக்கைகளை எடுத்தால் ஜப்பான் அதற்கு பதிலளிக்கும் என்றும் அவர் கூறினார்.