ad

மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் அவசரநிலை காரணமாக பாங்காக்கில் தரையிறங்கியது

18 செப்டெம்பர் 2025, 9:08 AM
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் அவசரநிலை காரணமாக பாங்காக்கில் தரையிறங்கியது

ஷா ஆலம், செப் 18: கோலாலம்பூரிலிருந்து டாக்காவுக்குச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் MH102, விமானி அவசரநிலையை அறிவித்ததை அடுத்து பாங்காக்கிற்குத் திருப்பி விடப்பட்டது.

போயிங் 737-800 விமானம் காலை 9.30 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து பங்களாதேஷின் டாக்காவுக்குப் புறப்பட்டதாக ``Airlive.net`` தெரிவித்துள்ளது.

9M-MLN என்ற பதிவு எண்ணைக் கொண்ட அவ்விமானம் மியான்மர் வான்வெளியில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

பின், விமானம் உடனடியாக தாய்லாந்தை நோக்கி வலதுபுறம் திரும்பி, புறப்பட்ட இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களுக்குப் பிறகு பாங்காக்கில் தரையிறங்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.