ad

ரேவாங் நிகழ்ச்சியை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு

11 செப்டெம்பர் 2025, 10:29 AM
ரேவாங் நிகழ்ச்சியை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு

ஷா ஆலம், செப் 11: எதிர்வரும் சனிக்கிழமை எம்பிஏஜே லெம்பா ஜெயா மண்டபத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ரேவாங் நிகழ்ச்சியை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வு காலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும். இதன் நுழைவு இலவசம் ஆகும், இந்நிகழ்வில் பல சுவாரஸ்மான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

அதில் ஜூம்பா, ப்ளாக்கிங் போட்டி, வண்ணம் தீட்டுதல், சோங்காக், கலாச்சார ஆகியவை அடங்கும்.

மேலும், கண்காட்சிகள், அரசு நிறுவன சேவைகள், புகைப்படக் கூடம், இலவச பல் பரிசோதனை, சமையல் எண்ணெய் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி பிரச்சாரம் ஆகியவையும் இடம்பெறும்.

வருகையாளர்கள் அதிர்ஷ்டக் குலுக்கு மூலம் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

இந்தத் திட்டம் உள்ளூர் சமூகத்தின் பிணைப்புகளை வலுப்படுத்துவதை எம்பிஏஜே நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து பார்வையாளர்களுக்கும் நுழைவு இலவசம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.