ad

தம்பியைத் தேடிச் சென்ற போது நேர்ந்த துயரம் - மின்னல் தாக்கி வங்காளதேச ஆடவர் மரணம்

9 செப்டெம்பர் 2025, 3:31 AM
தம்பியைத் தேடிச் சென்ற போது நேர்ந்த துயரம் - மின்னல் தாக்கி  வங்காளதேச ஆடவர் மரணம்

குவாந்தான், செப். 9 - முப்பதேழு வயதான முகமது ஷாஹாங்கிர் என்ற அந்த நபரின் உயிரைப் பலி கொண்ட இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 7.30 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக ரவுப் மாவட்ட போலீஸ் தலைவர்

சூப்ரிண்டெண்டன் முகமது ஷாஹ்ரில் அப்துல் ரஹ்மான் கூறினார். கோலாலம்பூரில் வசித்து வந்த ஷாஹாங்கிர் தனது தம்பியைக் காண்பதற்காக அந்த கட்டுமானப் பகுதிக்கு வந்து அங்குள்ள கொங்சி வீட்டில் தங்கியிருந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.

தனது தம்பியைத் தேடி அந்த கட்டுமானப் பகுதிக்கு அவ்வாடவர் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. மின்னல் தாக்கியதன் விளைவாக அவரது கால்சட்டையின் இடது பகுதி கிழிந்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.

உடனடியாக கோல லிப்பிசில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு அவ்வாடவர் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய முகமது ஷாஹ்ரில், அவ்வாடவர் மரணமடைந்து விட்டதை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து சவப்பரிசோதனைக்காக அவரது உடல் ரவுப் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.