பெய்ஜிங், செப். 2 - முதலீடுகளை அதிகரிப்பது, புதிய வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்காகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று முன்னணி சீனத் தொழில் தலைவர்களுடன் தொடர்ச்சியான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்களுக்கு தலைமை தாங்கினார்.
நிதியமைச்சருமான அன்வார் நான்கு நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு தற்போது சீனத் தலைநகரில் உள்ளார்.
இன்று காலை அவர் ஜே.டி. லோஜிஸ்டிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் வியூக நிர்வாக உறுப்பினர் ஹு வெய் தலைமையிலான ஜே.டி.கோம் உயர் நிர்வாகத்துடன் சந்திப்பை நடத்தினார்.
நாஸ்டாக் 100 மற்றும் ஃபோர்ச்சுன் குளோபல் 500 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஜே.டி.கோம்,
சீனாவின் மிகப்பெரிய மின்வணிக சில்லறை விற்பனை நிறுவனமாக உள்ளது. இது சீனா முழுவதும் 58 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது.
தொழில்நுட்பம் சார்ந்த இந்த நிறுவனம் சீனாவில் மிகப்பெரிய அளிப்பானை நிறைவேற்றும் உள்கட்டமைப்பை இயக்குகிறது. இதன் வழி 90 விழுக்காடு அளிப்பானைகள் அதே நாளில் அல்லது அடுத்த நாளில் பட்டுவாடா செய்யப்படும்.
அது தவிர, யாங்சே மெமரி டெக்னாலஜிஸின் தலைவரான சென் நான்சியாங் தலைமையிலான சீன செமிகண்டக்டர் தொழில் சங்கத்தின் தலைமையுடனும் அன்வார் ஒரு சந்திப்பை நடத்தினார்.
அன்வார் சந்தித்த இதர சி.எஸ்.ஐ.ஏ. பிரதிநிதிகளில் நவ்ரா தொழில்நுட்பத் தலைவர் ஜாவோ ஜின்ராங், பெய்ஜிங் எம்பிரியன் தொழில்நுட்பத் தலைவர் லியு வெய்ப்பிங், டோங்ஃபு மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஷி லீ, சி.எஸ்.ஐ.ஏ. ஒருங்கிணைந்த
பந்தயத் தட வடிவமைப்புப் பிரிவுத் தலைவர் வெய் ஷாவோஜுன் மற்றும் சி எஸ்.ஐ.ஏ. நிர்வாகி வாங் ஜுஞ்சி ஆகியோர் அடங்குவர்.
சி.எஸ்.ஐ.ஏ. என்பது செமிகண்டக்கடர் துறையுடன் தொடர்புடைய உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் உள்ள நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குடை அமைப்பாகும்.
இந்த வர்த்தக கூட்டத்தில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சீனாவின் முன்னணி வர்த்தகத் தலைவர்களுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு
2 செப்டெம்பர் 2025, 8:22 AM
தொடர்புடைய செய்திகள்
national
RON95 மானிய விலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - பிரதமர்
Shalini Rajamogun
3 மார்ச் 2026

national
பிரதமர் பதவிக்கால திருத்த மசோதா தோல்வி: நாடாளுமன்றத்தில் பரபரப்பு
Mavitthran
3 மார்ச் 2026

national
பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவது குறித்த சட்ட திருத்த மசோதா அடுத்த வாரம் இரண்டாம் வாசிப்புக்கு உட்படுத்தப்படும்
Mavitthran
27 பிப்ரவரி 2026

selangor
பத்துமலைக்குப் பிரதமர் அன்வார் வருகை தந்தபோது ஏன் வரவில்லை ? மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் விளக்கம்
Mavitthran
3 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




