ஷா ஆலம், ஆகஸ்ட் 28: நகர்ப்புறங்களில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளைத் தொடர மாநில அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
சிறு நகர்ப்புற தொழில்முனைவோருக்கு உதவ புளூபிரிண்ட் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் RM2 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.
தகுதி பெற்றவர்கள் வணிக உபகரணங்களைப் பெறுவார்கள், அவற்றுள்:
- தையல் இயந்திரங்கள்
- அரிசி குக்கர்
- குளிர்சாதன பெட்டிகள்
- வணிகத் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வணிக உபகரணங்கள்.
சிலாங்கூர் புளூபிரிண்ட் உதவி என்றால் என்ன?
சிறு தொழில்முனைவோர் மற்றும் B40 வணிகர்களுக்கு அவர்களின் வருமானத்தை அதிகரிக்க RM10,000 வரை மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வடிவில் உதவி வழங்கும் வறுமை ஒழிப்பு உதவித் திட்டம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
முக்கிய இலக்கு குழுக்கள்:
- வர்த்தகர்கள்
- உணவக வியாபாரிகள்
- சுயதொழில் செய்பவர்கள் (B40)
- விண்ணப்பதாரர்கள் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்
எப்படி விண்ணப்பிப்பது?
இணையம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க இயலாது. மாறாக மாவட்ட மற்றும் நில அலுவலகம் அல்லது மக்கள் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் தேர்வுக் குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு மாவட்ட மற்றும் நில அலுவலகத்தால் பரிசீலிக்கப்பட்டு விசாரிக்கப்படும்.
ஒப்புதல் பெற்ற பிறகு, உதவி பெறுபவர்கள் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு, உதவி அவர்களின் வருமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்யப்படும்.


