புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM20,500 நன்கொடை

15 ஆகஸ்ட் 2025, 9:52 AM
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM20,500 நன்கொடை

ஷா ஆலம், ஆகஸ்ட் 15: ஏப்ரல் 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் (HASiL) மொத்தம் RM20,500 நன்கொடையாக வழங்கியது.

நன்கொடை ஒப்படைப்பு விழாவை HASiL துணை தலைமை நிர்வாக அதிகாரி (வரிவிதிப்பு நடவடிக்கைகள்) ஷஹாருடி ஓத்மான் இன்று சுல்தான் சலாவுடின் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் ஒப்படைத்தார்.

இதற்கிடையில், வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் வருமான ஆதாரங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக ஷஹாருடி கூறினார்.

“RM20,500 நிதி நாடு முழுவதும் உள்ள HASiL ஊழியர்களிடமிருந்து பெற்றப்பட்டது ஆகும். இது அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பாகும்.

“மலேசியர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். எனவே அந்த அடிப்படையில் நாங்கள் நன்கொடைகளை சேகரித்து வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.