நாடி திட்டம் மூலம் 600க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண் தொழில்முனைவோர் பயன்

13 ஆகஸ்ட் 2025, 7:31 AM
நாடி திட்டம் மூலம் 600க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண் தொழில்முனைவோர் பயன்

ஷா ஆலம், ஆகஸ்ட் 13 — சிலாங்கூரில் 600க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண் தொழில்முனைவோர் டாருல் எஹ்சான் வணிகத் திட்டத்தால் (NaDi) பயனடைந்துள்ளனர்.

தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) மூலம் அவர்களை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்ப, தொழில்களைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த இந்த திட்டத்தின் கீழ் RM50,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூரால் நிர்வகிக்கப்படும் NaDi திட்டம் உணவு, கைவினைப்பொருட்கள், அழகு சேவைகள் மற்றும் டிஜிட்டல் பிரிண்டிங் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியது. பணத்தை திருப்பிச் செலுத்த ஐந்து ஆண்டுகள் வரை கால அவகாசம் உள்ளது என சிலாங்கூர் மகளிர் பேரவை (சிவானிஸ்) 2025 பிரதிநிதியும் தொழில்முனைவோருக்கான மாநில நிர்வாக கவுன்சிலருமான நூர் ஆசிமா அஹ்மட் கூறினார்.

“பராமரிப்புத் துறைக்கான Selangor Care Accelerator 2025  (XCare), 50,000க்கும் அதிகமாக பதிவுசெய்யப்பட்ட வர்த்தகர்களைக் கொண்ட சிலாங்கூர் தளம் (PLATS), 10,000 தொழில்முனைவோரை உருவாக்கிய SelBiz, மற்றும் பயிற்சி, மானியங்கள் மற்றும் வழிகாட்டுதலை இணைத்து உசாஹனிதா வனிதா பெர்டாயா சிலாங்கூர் (WBS) போன்ற பிற திட்டங்கள் TVET முயற்சி கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் ஊக்கியாக இருப்பதை நிரூபிக்கின்றன.

TVET முடித்த பிறகு கிராமப்புற பெண்களுக்கான எதிர்காலம் மற்றும் B40 குழுவிற்கு வேலை வாய்ப்புகள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான மாநில அரசின் முயற்சிகள், குறிப்பாக தொழில்முனைவோர் குறித்து ஸ்ரீ கெம்பங்கன் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தில் (STDC) மலேசிய திறன் சான்றிதழ் (SKM), தொழில்முறை சான்றிதழ்கள் மற்றும் குறுகிய கால படிப்புகளுக்கான பயிற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்குவது உட்பட TVET திட்டத்திற்கு சிலாங்கூர் ஆண்டுதோறும் RM16 மில்லியனை ஒதுக்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.

சிவானிஸின் மூன்றாவது பதிப்பு நேற்று நடைபெற்றது. சிலாங்கூர் முழுவதிலுமிருந்து 56 பெண் பிரதிநிதிகளையும், பிற மாநிலங்களிலிருந்து அழைக்கப்பட்ட பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பெண்கள் தலைமைத்துவ தளமாக அமைந்தது.

உருவகப்படுத்தப்பட்ட மாநில சட்டமன்ற வடிவமைப்பைப் பயன்படுத்தி, இந்த திட்டம் பெண்களின் தலைமைத்துவ திறமையை வளர்ப்பது, கொள்கை அறிவை வலுப்படுத்துவது, மாநில மற்றும் தேசிய மட்டங்களில் எதிர்காலத் தலைவர்களாக மாற அவர்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.