சீனாவின் ஷங்காய் நகரில் இரண்டாவது முறையாக சூறாவளி தாக்கியது

1 ஆகஸ்ட் 2025, 8:58 AM
சீனாவின் ஷங்காய் நகரில் இரண்டாவது முறையாக சூறாவளி தாக்கியது

ஷங்காய், ஆகஸ்ட் 1 - இவ்வாண்டின் எட்டாவது சூறாவளியான கோ-மெய், புதன்கிழமை கிழக்கு சீனாவின் ஷங்காய் நகரில் இரண்டாவது முறையாக தாக்கியது.

சூறாவளியின் மையப்பகுதிக்கு அருகில் அதிகபட்ச காற்றின் வேகம் விநாடிக்கு 23 மீட்டராகவும் குறைந்தபட்ச வளிமண்டல அழுத்தம் 978-ஆகவும் பதிவாகியது.

அதனை தொடர்ந்து, சூறாவளியை எதிர்கொள்ளும் விதமாக, Fengxian மாவட்டம் தொடக்க கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதில் அபாயங்களைக் கண்டறிந்து வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் ஆபத்தான பகுதிகளில் இருந்து குடியிருப்பாளர்களை இடமாற்றம் செய்வது ஆகியவையும் அடங்கும்.

செவ்வாய்க்கிழமை தொடங்கி அம்மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. 71 மீன்பிடி படகுகளும் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன

--பெர்னாமா

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.