NATIONAL

சிலாங்கூரில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 13.3 விழுக்காடு குறைந்தது

29 ஜூலை 2025, 10:14 AM
சிலாங்கூரில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 13.3 விழுக்காடு குறைந்தது

ஷா ஆலம், ஜூலை 29 - சிலாங்கூர் மாநிலத்தில்  குற்றச் செயல்களின்  விகிதம்  முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த  2024 ஆம் ஆண்டு  13.3 விழுக்காடு

குறைந்துள்ளதாக முன்னாள் சிலாங்கூர்  காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

குற்றச் சம்பவங்கள் அதிகம்  நடைபெறும் இடங்களில் அரச மலேசியா போலீஸ்படை  விரிவான உத்தியை செயல்படுத்தியதன் விளைவாக குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

ரோந்துப் பணிகள், அதிக ஆபத்துள்ள இடங்களில் கண்காணிப்பு  மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் படிப்படியான அணுகுமுறை பொதுப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது வெறும் ரோந்துப் பணிகளை மட்டுமல்ல, மாறாக சமூகம், உள்ளூர் அமைப்புகள் மற்றும் சமூக காவல்துறையின் தீவிர ஈடுபாடும்  அமைதியான சூழ்நிலைக்கு பங்களிக்கிறது  என்று அவர் நேற்றிரவு  ஆஸ்ட்ரோ அவானியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது  கூறினார்.

அன்று, டத்தோ ஹூசேனை  இடமாற்றம் செய்வதாக  அரச மலேசிய போலீஸ் படை கடந்த ஜூன் 20ஆம் தேதி  அறிவித்தது. அவர் ஜூலை 21 முதல் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர் பதவியை நிரப்புவார்.

தரவு ஆய்வு  மற்றும் சமூகக் கருத்துகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்துள்ள இடங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் ரோந்து வாகன பிரிவினரை  நியமிப்பதன் மூலம் கண்காணிப்பு  செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஹூசைன் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் ரோந்து உத்திகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன, இதில் உச்ச நேரங்கள் மற்றும் புதிய ஹாட்ஸ்பாட்களைக் கண்காணித்தல் அடங்கும்," என்று அவர் கூறினார்.

கூடுதலாக, பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது, சமூகத்தை நேரடியாகச் சென்றடைவதற்கும் உள்ளூர் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு படியாகும்.

இதற்கிடையில், வழக்கமான துறை மாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலமும், சிறந்த செயல்திறனுக்கான பாராட்டுக்களையும் உறுப்பினர்களின் உந்துதலின் முக்கியத்துவத்தை ஹுசைன் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.