NATIONAL

சிசிடிவி கேமராக்களை நிறுவுவதை கட்டாயமாக்க காவல்துறை திட்டம்

29 ஜூலை 2025, 9:42 AM
சிசிடிவி கேமராக்களை நிறுவுவதை கட்டாயமாக்க காவல்துறை திட்டம்

ஷா ஆலம், ஜூலை 29: சிலாங்கூரில் உள்ள வணிக வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதை கட்டாயமாக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

வணிகப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த மாநில அரசு மற்றும் பிபிடிகளுடன் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு வருவதாக சிலாங்கூர் காவல்துறையின் முன்னாள் தலைவர் டத்தோ ஹுசைன் உமார் கான் தெரிவித்தார்.

ஜூலை 21 முதல் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநராக இருக்கும் அவர், குற்றத் தடுப்பு மற்றும் காவல்துறை விசாரணைகளின் அடிப்படையில் சிசிடிவி பொருத்துதல் உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

“இந்த குற்றவியல் குழுக்கள் சிசிடிவி உள்ள பகுதியைக் காணும்போது, அவர்கள் வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள். குற்றவியல் விசாரணைகளில் மட்டுமல்லாமல், கொள்ளை அல்லது நாசவேலை போன்ற தேவையற்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

“ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் அமைப்புகளைப் பயன்படுத்துவதை காவல்துறை ஊக்குவித்து வருகிறது, குறிப்பாக கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஜெயா போன்ற முக்கிய நகரங்களில், நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளன.

ட்ரோன்களின் பயன்பாடு, காவல்துறையினர் பெரிய பகுதிகளில் ரோந்து செல்லவும், அவசரகால சம்பவங்களின் போது கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடி காட்சிகளை வழங்கவும் உதவுகிறது என்றார்.

"அவ்வப்போது நாங்கள் ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரிபோம். ஏனெனில் இது மிகவும் பயனுள்ள கண்காணிப்பை நடத்துவதற்கு உதவும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.