NATIONAL

தொடங்கியதை முடிக்க பிரதமர் மேல் நம்பிக்கை வைப்போம் - குணராஜ் வேண்டுகோள்

25 ஜூலை 2025, 10:01 AM
தொடங்கியதை முடிக்க பிரதமர் மேல் நம்பிக்கை வைப்போம் - குணராஜ் வேண்டுகோள்

(ஆர்.ராஜா)

கிள்ளான், ஜூலை 25 - நாடு தொடர்ந்து முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கிய பணிகளை முழுமையாக முடிக்க அவர் மீது நம்பிக்கை வைத்து  வாய்ப்பினை வழங்குவோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ்  கேட்டுக் கொண்டார்.

பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அமைப்பு  ரீதியாகவும் மக்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தக்கூடிய   மற்றொரு மறுசீரமைப்பு மலேசியாவுக்கு

தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

உறுதியற்ற தன்மை, பலவீனமான நிர்வாகம் மற்றும் தொற்றுநோய் பாதிப்பிலிருந்து  மீளப் போராடும் பொருளாதாரம் ஆகியவற்றால் நலிந்த  ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பதவியேற்ற காலம் முதல் அன்வார் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது தலைமை நிறுவன சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஒரு புதிய நோக்கத்தைக் கொண்டு வந்துள்ளது என்று மந்திரி பெசாரின் இந்திய சமூகத்திற்கான  சிறப்பு பிரதிநிதியுமான அவர் கூறினார்.

இப்போது, நாடு மற்றொரு அரசியல் சந்திப்பில் நிற்கிறது. எழுப்பப்படும் கேள்வி இதுதான்

பிரதமர்  மற்றும் அவரது அரசாங்கம் தொடங்கிய சீர்திருத்தங்களை முடிக்க நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது புதிய நிர்வாகத்துடன் மீண்டும் தொடங்குவதற்கான ஆபத்தை ஏற்படுத்தப் போகிறோமா? என்பதுதான்.

இதனை  மக்கள் இதை கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பிரதமர் எளிதான சூழ்நிலையில் பதவிக்கு வரவில்லை. அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அவநம்பிக்கையால் சோர்வடைந்த ஒரு தேசத்தை வழி நடத்துவதற்கான  பொறுப்பை ஏற்றார்.

இருப்பினும், குறுகிய காலத்திற்குள் துணிச்சலான முடிவுகள், வலுவான அனைத்துலக  நிலைப்பாடு, முதலீட்டாளர் நம்பிக்கை உயர்வு மற்றும் நிதிப் பொறுப்பு மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளின் அமலாக்கத்தைக் கண்டோம்.

ஊழல் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அல்லாமல் திட்டமிடப்பட்ட  முறையில்  கையாளப்படுகிறது

அதோடு மட்டுமின்றி  மடாணி பொருளாதார கட்டமைப்பு கோடிக் கணக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறது.  எஸ்.டி.ஆர். மற்றும் சாரா போன்ற சமூக நலத் திட்டங்கள் மற்றும் இலக்கு மானியங்கள் உதவி தேவைப்படுபவர்களைச் சென்றடைகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் நடைபெற்று  வருகின்றன .

இந்த முன்னேற்றம் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். இப்போது போக்கை மாற்றுவது ஏற்கனவே உள்ள முயற்சிகளைத் தடம் புரளச் செய்வதோடு மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும் மக்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும்.

மலேசியாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணியைத் தொடங்குவதற்கு மட்டுமல்ல அதை முடிக்கவும் இந்த ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆணையை வழங்குவோம். நிலைத்தன்மை செயல்படட்டும். பிரதமர் தொடங்கியதை முடிக்க வாய்ப்பை வழங்குவோம் என குணராஜ் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.