NATIONAL

டோல் கட்டண உயர்வு ஒத்தி வைப்பு- வெ.50 கோடி நிதிச்சுமையை அரசு ஏற்கும்

23 ஜூலை 2025, 3:53 AM
டோல் கட்டண உயர்வு ஒத்தி வைப்பு- வெ.50 கோடி நிதிச்சுமையை அரசு ஏற்கும்

ஷா ஆலம், ஜூலை 23 - நாட்டில் டோல் கட்டண உயர்வை ஒத்தி வைக்க

அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. மக்கள் தற்போதைய கட்டண

விகிதத்தை மக்கள் தொடர்ந்து அனுபவிப்பதற்கு ஏதுவாக இந்த

சலுகை வழங்கப்படுகிறது. இதற்கு உண்டாகும் 50 கோடி வெள்ளி

நிதிச்சுமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.

செனாய்-டேசாரு நெடுஞ்சாலை, கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2, தென்

கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை, பட்டர்வெர்த் புறவட்டச் சாலை

மற்றும் கோலாலம்பூர்-புத்ரா ஜெயா நெடுஞ்சாலை ஆகியவற்றை இந்த

கட்டண உயர்வு ஒத்தி வைப்பு உட்படுத்தியிருக்கும் என பிரதமர்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.