ANTARABANGSA

Coca-Cola பானங்களில் இனி கரும்புச் சக்கரை

18 ஜூலை 2025, 9:20 AM
Coca-Cola பானங்களில் இனி கரும்புச் சக்கரை

வாஷிங்டன் டி.சி, ஜூலை 18 - கடந்த புதன்கிழமை, உள்நாட்டு சந்தையில் வெளியிட்டப்படும் Coca-Cola பானங்களில் இனி கரும்புச் சக்கரையைப் பயன்படுத்த அதன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இம்மாற்றம் அமெரிக்க மக்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று ``Truth Social`` எனும் தமது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, High-Fructose Corn Syrup, HFCS எனப்படும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.

எனினும், அதற்கு அமெரிக்காவின் சுகாதார செயலாளர் ரோபர்ட் ஃப்.கெனடி ஜே.ஆர், ``America Healthy Again`` எனும் தமது சுகாதார பிரச்சாரத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதனிடையே, Coca-Cola புற்றுநோயை ஏற்படுத்தும் பானம் என்று முன்னதாக, அனைத்துலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், IARC கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.