NATIONAL

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட RM1 மில்லியன் செலவு

16 ஜூலை 2025, 4:58 AM
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட RM1 மில்லியன் செலவு

ஷா ஆலம், ஜூலை 16: புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட கிட்டத்தட்ட RM1 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவுகளை மாநில மற்றும் மத்திய அரசுகளின் நிதி ஈடுகட்டியதாக டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதை உறுதி செய்வதற்காக மருத்துவ உபகரணங்கள், போக்குவரத்து செலவுகள் மற்றும் பராமரிப்பாளர் ஆதரவு போன்ற கூடுதல் உதவிகளும் வழங்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

"மக்களின் நல்வாழ்வு மாநில நிர்வாகத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது என்பதை இந்த உறுதிமொழி தெளிவாகக் காட்டுகிறது" என்று அவர் முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக, சம்பவம் நடந்த நாளில், காயமடைந்த 150 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.