MEDIA STATEMENT

பள்ளிகளில் மது விற்பனை விவகாரம், விசாரணைக்கு அதிகாரிகளிடம் கே. பி. எம் ஒப்படைப்பு

12 ஜூலை 2025, 12:11 PM
பள்ளிகளில் மது விற்பனை விவகாரம், விசாரணைக்கு அதிகாரிகளிடம் கே. பி. எம் ஒப்படைப்பு

கோல திராங்கானு     ஜூலை  12 ; கோல திராங்கானுவில்  சமீபத்தில் வைரலாகிய பள்ளி பகுதியில் ஒரு வளாகத்தில் மது ஏலம் விடும்  சம்பவம் குறித்து விசாரிக்க மலேசிய கல்வி அமைச்சகம் (கே. பி. எம்) அதிகாரிகளிடம் முழுமையாக ஒப்படைத்துள்ளது. கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தவறான நடத்தை அல்லது விதிமுறைகளை மீறுதால் விவகாரத்தை தனது அமைச்சகம் சமரசம் செய்யாது என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

"நாங்கள் அதை விசாரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளோம், எந்தவொரு தவறான நடத்தை அல்லது விதிமுறைகளை மீறுவதில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்". "நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று மக்கள் மடாணி (பி. எம். ஆர்) 2025 திரங்கானு திட்டத்தின் நிறைவு விழாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

ஏல நிகழ்வின் போது நடந்த சண்டை சம்பவம் உட்பட அதிகாரிகளின் விசாரணைகள் இன்னும் நடத்தப்பட்டு வருவதாகவும், விதிமுறைகள் மீண்டும் வலியுறுத்தப் படுவதையும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதையும் உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சகம் (கே. பி. எம்) அவ்வப்போது வழக்கின் முன்னேற்றங்களை கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில், ஜோகூரின் பொந்தியானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மதுபான ஏல விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டதாக வைரலாகியது, இது சமூகத்தினரிடையே சர்ச்சையைத் தூண்டியது, மேலும் இந்த நிகழ்வின் போது சண்டைகளும் வெடித்தன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.