NATIONAL

ஆபத்தான முறையில் சாலைப் போக்குவரத்துத் துறையின் வாகனத்தை ஓட்டிய பணியாளர் இடைநீக்கம்

10 ஜூலை 2025, 8:10 AM
ஆபத்தான முறையில் சாலைப் போக்குவரத்துத் துறையின் வாகனத்தை ஓட்டிய பணியாளர் இடைநீக்கம்

கோலாலம்பூர், ஜூலை 10 - பேராக், சிம்பாங் பூலாயில் சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

அதில் JPJ வாகனம் ஒன்று சாலையின் இரட்டைக் கோட்டில் ஆபத்தான முறையில் இன்னொரு வாகனத்தை முந்திச் செல்லும் காட்சி பாதிவாகியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாகப் புகார் கிடைத்த உடனே நோட்டீஸ் வெளியிடப்பட்டு அந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார். ஓட்டுநரின் அச்செயலைத் தாங்கள் கடுமையாகக் கருதுவதாக அவர் சொன்னார்.

அவ்வாடவர் ஏற்கனவே இது போன்ற தவறுகளைச் செய்துள்ளாரா என்பதும் கண்டறியப்பட்டு வருகிறது.

சாலை விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும் சாலைப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று ஃபாட்லி ரம்லி கூறினார்.

JPJ வாகனமொன்று சாலையின் இரட்டைக் கோட்டில் ஆபத்தான முறையில் இன்னொரு வாகனத்தை முந்திச் செல்லும் 12 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.