NATIONAL

பழங்குடியினரின் கலை, கலாச்சாரத்தை வெளிப்படுத்த பூர்வக்குடியினர் விழா

9 ஜூலை 2025, 9:12 AM
பழங்குடியினரின் கலை, கலாச்சாரத்தை வெளிப்படுத்த பூர்வக்குடியினர் விழா

ஷா ஆலம், ஜூலை 9 -  எதிர்வரும் ஆகஸ்டு மாதம்  9 ஆம் தேதி நடைபெறும்  சிலாங்கூர்  மாநில அளவிலான 2025 உலகப் பழங்குடி மக்கள் தினக் கொண்டாட்டத்து முன்னிட்டு  நடைபெறும் பூர்வக்குடியினர் கலாச்சார விழாவில் சுமார் 5,000 பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சிப்பாங், கெலின்சிங்கில்  உள்ள கம்போங் பூர்வக்குடி கிராமத்தில் நடைபெறும் இந்த விழா, பூர்வக்குடி சமூகத்தின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு   சொன்னார்.

கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக அம்சங்களில் பழங்குடியினரை மேம்படுத்துவதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த விழாவின் முக்கிய நோக்கங்களில்  தெமுவான், மா மேரி மற்றும் செமாய் போன்ற பல்வேறு பூர்வக்குடி இனக்குழுக்களின் அடையாளம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்கும்  அதே நேரத்தில் பூர்வக்குடி  கிராமங்களை சிலாங்கூரின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களாக நிலைநிறுத்துவதும் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

பூர்வக்குடி சமூகம் எதிர்கொள்ளும் உரிமைகள், வரலாறு மற்றும் சவால்கள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், கலை, கைவினைப்பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் அதிகாரமளிப்பதற்கான தளங்களை வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது

என்று அவர் இன்று நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சிலாங்கூரின் ஏழு மாவட்டங்களில் இருக்கும்  74 கிராமங்களில் 20,000 க்கும் மேற்பட்ட பூர்வக்குடி உறுப்பினர்கள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஒவ்வொரு கிராமமும் சேவாங் மற்றும் ஜூ'ஓ நடனங்கள், மஹ் மேரி மரச் சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய மதிப்புகள் நிறைந்த மூதாதையர் சடங்குகள் போன்ற தனித்துவமான கலாச்சார நடைமுறைகளைக் கொண்டுள்ளன என்று பாப்பாராய்டு கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.