ஷா ஆலம், ஜூலை 3 - மாதம் 50.00 வெள்ளி கட்டண மானியத்தை வழங்கும் சிலாங்கூர் பாலர் பள்ளி உதவித் திட்டத்திற்கான (துனாஸ்) விண்ணப்பங்கள் ஜூலை 1ஆம் முதல் திறக்கப்பட்டுள்ளன.
தகுதியுள்ள சிறார்களுக்கான விண்ணப்பங்களை tunas.yawas.com.my என்ற இணைப்பின் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்று சிலாங்கூர் யாவாஸ் எனப்படும் சிறார் பாரம்பரிய அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இந்த உதவி ரொக்கமாக வழங்கப்படுவதில்லை. மாறாக, கல்விக் கட்டணமாகப் பதிவு செய்யப்பட்ட பாலர் பள்ளி நிர்வாகத்திடம் நேரடியாகச் செலுத்தப்படும் என்று அது தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
பதிவுசெய்யப்பட்ட பாலர் பள்ளிகளின் பட்டியல் குறித்த தகவல்களை https://tunasv2.yawas.my/
இந்த பாலர் பள்ளி கட்டண உதவித் திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சிலாங்கூர் முழுவதும் 21,236 பெற்றோர்கள் இந்த துனாஸ் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.


